போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக பிணையில் வந்து தங்கள் போட்டியாளர்களை கொலை செய்கின்றனர்-பொலிஸ் பேச்சாளர்

Published By: Rajeeban

21 Jun, 2023 | 10:09 AM
image

இலங்கையில் சமீபத்தில் பரவலாக இடம்பெற்றுள்ள துப்பாக்கிசூட்டு சம்பவங்களிற்கும் போதைப்பொருள் கடத்தலிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிசூட்டு சம்பவங்களில் போதைப்பொருள் கும்பல்களிற்கு தொடர்பிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என  பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்களை அடையாளம் கண்டு கைதுசெய்யும்நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்,என தெரிவித்துள் பொலிஸ்பேச்சாளர் தங்களுடைய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு போட்டியாக உள்ளவர்களை பழிவாங்குவதற்காக போதைப்பொருள் வர்த்தகத்தில்  ஈடுபட்டுள்ளவர்களும் அதனுடன் தொடர்புள்ளவர்களும் துப்பாக்கி பிரயோகங்களை திட்டமிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக இவர்களில்சிலர் முன்னர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் வீதிக்கு வந்து தங்களின் போட்டியாளர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களை பிணையில் விடுதலை செய்வது தொடர்பான சட்டங்களை நாங்கள் இறுக்கமாக்கவேண்டும்,அதனை செய்தால் அவர்கள் வீதிக்கு வந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைதடுக்கலாம்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28