(நெவில் அன்தனி)
இந்தியாவில் புதன்கிழமை (21) ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண (SAFF) கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காக பாகிஸ்தான் அணி அங்கு பயணமாகிறது.
இந்தியா செல்வதற்காக பாகிஸ்தான் அணியினருக்கு இந்திய விசா வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய அயல்நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த வருட சாவ் சம்பியன்ஷிப் ஆரம்பப் போட்டியில் மோதவுள்ளன.
இதேவேளை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு பீபா தடை விதித்துள்ளதால் சாவ் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அணி பங்குபற்றவில்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக அரசியல் பதற்றம் நிலவி வருவதால் இரண்டு நாடுகளும் பரஸ்பர விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவது மிகவும் அபூர்வமாக இருந்து வருகிறது.
மும்பையில் 2008இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பெங்களூரில் நடைபெறவுள்ள 8 நாடுகளுக்கு இடையிலான சாவ் சம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதானது அந் நாட்டின் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிசெய்வதாக அமைகின்றது.
'அர்ப்பணிப்புடைய விளையாட்டு வீரர்களாக அரசியல் எல்லைகளைத் தாண்டி நாடுகளுக்கு இடையில் வலுவான உறவுகளை வளர்ப்பத்தில் விளையாட்டுத்துறைக்கு சக்தி இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்' என ஏ. எவ். பி.க்கு பாகிஸ்தான் அணித் தலைவர் யூசுப் பட் கூறியுள்ளார்.
'இந்த சுற்றுப் பயணத்தின்போது பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரசிகர்களின் மனங்களை கவர்வோம்' எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா செல்லும் 24 வீரர்கள், 8 அதிகாரிகள் கொண்ட பாகிஸ்தான் குழாத்திற்கு திங்கட்கிழமை மாலை இந்தியா விசா வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கடைசியாக 2014இல் இந்தியாவில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியதுடன் அந்தத் தொடரை சமப்படுத்தியிருந்தது.
எனினும் பங்களாதேஷில் 2018இல் நடைபெற்ற சாவ் சம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் இந்தியா வெற்றிகொண்டிருந்தது.
இந்த வருட தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் குவைத், லெபனான் ஆகிய நாடுகள் அழைப்பு அணிகளாக பங்குபற்றுகின்றன.
தெற்காசிய கால்பந்தாட்டத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அந்த இரண்டு அணிகளுக்கும் இந்தியா கால்பந்தாட்ட சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் ஆகியனவும் பி குழுவில் லெபனான், பங்களாதேஷ், மாலைதீவுகள், பூட்டான் ஆகியனவும் பங்குபற்றுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM