அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - மஹிந்த அமரவீர

Published By: Digital Desk 3

20 Jun, 2023 | 05:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தேவையான அளவு உரம் கையிருப்பில் இருக்கின்றன. விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித தராதரமும் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுப்போம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகையில்,

80 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் போது அரிசி ஒரு கிலோ 200 ரூபா மற்றும் 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

லுனுகம்வெஹெர பகுதியில் வீதிக்கு அருகில் 5 கிலோ அரிசி பொதிகள் கிலோ 125 -130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நீண்ட காலமாக கடைகளுக்கு செல்வதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

நாட்டில் பெருமளவு மக்கள் நாட்டரிசி மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றையே உணவுக்காக கொள்வனவு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கும் வகையில் அந்த அரிசி வகைகள் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

குறைந்த விலையில் அவற்றை சந்தையில் பெற்றுக் கொள்ள முடியும்.  வெகு தூரம் செல்ல முடியாவிட்டால் சதொச நிறுவனங்களில் அவற்றைக் கொள்வனவு செய்யலாம்.

அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவிக்கும் வகையில் நாட்டில் எங்கும் எம். ஓ.பி உரம் தட்டுப்பாடு கிடையாது. அவ்வாறு காணப்பட்டால் உடனடியாக அவற்றை வழங்க முடியும்.

சில அதிகாரிகள் அரசாங்கத்தை அசெளகரியங்களுக்கு உள்ளாக்குவதற்காக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றன.

அவர்கள் அந்த உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 40,000 ரூபாவுக்கு மேல் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்ட யூரியா உரம் தற்போது விவசாயிகளுக்கு 9,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது.

அதேபோன்று எம் ஓ பி உரமும் 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உரங்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04