(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளார். குறித்த துப்பாக்கி பிரயோகம் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஐ.டி.எச் வீதியின் கொலன்னாவ பிரதேசத்தில் வீதியின் அருகில் நின்று கொண்டிருந்த நபரொருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த குறித்த நபர் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 41 வயதுடைய கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்களை கைது செய்ய வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM