யாழில் 'செய்தியாளர் - ஊடக தூதுமடல்' சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு  

Published By: Nanthini

19 Jun, 2023 | 11:45 AM
image

(எம்.நியூட்டன்)

'செய்தியாளர் - ஊடக தூதுமடல்' என்ற ஊடகத்துறை சார்ந்த சஞ்சிகை அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் சனிக்கிழமை (17) யாழில் வெளியிடப்பட்டது.  

இந்நிகழ்வு யாழ்ப்பாணம் பெரிய தோட்டம் பீச் வீதியில் உள்ள பிசப் சவுந்தரம் மீடியா சென்ரரில் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் விரிவுரையாளர் கிருத்திகா தர்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சிறப்பு விருந்தினராக வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்போது, செபஸ்தியாம்பிள்ளை மைக்கல் தாசன் ஆசியுரை வழங்கியதோடு, முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார். 

இதனையடுத்து, ஊடகவியலாளராக இருந்து கலைப் பீடாதிபதியாக உயர்ந்துள்ள பேராசிரியர் ரகுராம் ஊடக விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 

ஊடகத்துறை சார்ந்து யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 80களில் 'பத்திரிகையாளன்' என்ற பெயரில் சஞ்சிகையொன்று வெளிவந்திருந்தது.

வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் இந்த சஞ்சிகை வெளியிடப்பட்டது என்ற தகவலை 'ஊடக தூதுமடல்' சஞ்சிகையில் உள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, மூத்த ஊடகவியலாளர் ராதேயன் தொடர்பான ஒரு விரிவான கட்டுரை உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவிலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவும் இந்த சஞ்சிகையில் காணப்படுகின்றன. 

இலங்கையில் குறிப்பாக, தமிழ் ஊடகத்துறையுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தரும் ஒரு சஞ்சிகையாக இந்த மாதம் முதல் மாதந்தோறும் 'செய்தியாளர் - ஊடக தூதுமடல்' சஞ்சிகை வெளிவரும் என்று அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை இந்நிகழ்வில் தெரிவித்தார். 

இந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர் தினேஷ், மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன், பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32