bestweb

சாய்ந்தமருதில் போதைப்பொருட்களுடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவர் தொடர்பில் மேலதிக விசாரணை

Published By: Nanthini

19 Jun, 2023 | 11:08 AM
image

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் கடந்த திங்கட்கிழமை (12) போதைப்பொருள்களுடன் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை தம் வசம் வைத்திருந்தபோது கைதானவர்களே செவ்வாய்க்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரகசியமாக கிடைத்த புலனாய்வு தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸார் கடந்த திங்கட்கிழமை இரவு மாறுவேடத்தில் சென்று முந்திரியடி வீதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் வைத்திருந்த ஒரு தொகை கஞ்சா, ஹெரோயின் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

அதனையடுத்து, கைதானவர்கள் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 19, 25, 19, 30 வயதுடையவர்களே கைதாகியுள்ளனர். அவர்களில் 19 வயது சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் கைத்தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள், சட்ட விரோத புறா வளர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இவை தொடர்பிலும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க...

2025-07-20 23:33:41
news-image

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த...

2025-07-20 22:25:42
news-image

ஜூலை 22 முதல் 25 வரை...

2025-07-20 21:15:56
news-image

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே...

2025-07-20 21:21:57
news-image

"பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம்...

2025-07-20 19:42:50
news-image

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 -...

2025-07-20 19:04:20
news-image

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட...

2025-07-20 18:43:57
news-image

மலையக மக்களில் வீடு வசதியற்ற நான்காயிரத்து...

2025-07-20 18:12:42
news-image

சம்பூர் கடற்கரையில் மிதிவெடி அகழ்வுப் பணியின்...

2025-07-20 22:58:54
news-image

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன்...

2025-07-20 23:03:26
news-image

பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில்...

2025-07-20 17:25:24
news-image

கொட்டாவை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர்...

2025-07-20 16:53:08