(எம்.வை.எம்.சியாம்)
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (17) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெஸ்டியன் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை, ஹினடயான பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 33 வயதுடைய இருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தாகொன்ன பிரதேசத்திலிருந்து மினுவாங்கொடைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இருவரை நோக்கி காரில் வந்த சிலரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், டீ-56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்களை கைதுசெய்ய மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM