மருத்துவ தொழில்நுட்பங்கள் மேம்பட்டு வருகிறது. கடந்த தசாப்தங்களை விட புற்றுநோயை குணப்படுத்துவதில் பல நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில் எத்தகைய புற்று நோயாக இருந்தாலும்... அதனை சிகிச்சை அளிப்பதற்காக மூன்று வகையினதான சிகிச்சை முறை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
சத்திர சிகிச்சை முறை, கீமோதெரபி பாணியிலான மருந்தியல் சிகிச்சை முறை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறை என மூன்று சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்ட்ரா ஒபரேட்டிவ் ரேடியேஷன் சிகிச்சை முறை எனும் புதிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உண்டாகும் இரைப்பை புற்றுநோய், குடல் புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய் என பல புற்று நோய்கள் பாதிப்புகளுக்கு தற்போது இன்ட்ரா ஒபரேட்டிவ் ரேடியேஷன் சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சை முறையின்போது சத்திர சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை அகற்றும் அதே தருணத்திலேயே கதிர்வீச்சு சிகிச்சையையும் அளிக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்புகள் வருவதற்கான சாத்தியக்கூறு குறைக்கப்படுகிறது.
மேலும் சத்திர சிகிச்சையின் போது கண்களுக்கு அகப்படாத புற்றுநோய் கட்டிகளும்... கதிர்வீச்சு சிகிச்சையின் போது அழிக்கப்படுவதால், புற்றுநோயிற்கான முழுமையான நிவாரண சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது.
மேலும் இத்தகைய சிகிச்சையின் போது புற்றுநோய் கட்டிகள் சத்திர சிகிச்சை செய்து அகற்றிய பிறகு, ஆரோக்கியமான பகுதிகளில் குறைவான பாதிப்பு ஏற்படும் வகையில் கதிர்வீச்சு சிகிச்சை அமைக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.
மேலும் இதன் போது வழங்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை நிலையானதாகவும், சிலருக்கு சத்திர சிகிச்சைக்கு முன்பாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
டொக்டர் வைத்தீஸ்வரன்
தொகுப்பு அனுஷா











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM