வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வைக்கால் பிரதேசத்தில் உள்ள பேக்கரி பொருட்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த பெண்ணொருவர் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் கொலை செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (14) அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் வட்டவளை பிரதேசத்தில் வசித்து வந்த சத்தியவேலு நதிகா என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்தின் பின்னர் கணவருடன் ஹட்டன் வட்டவளை பகுதியில் வசித்து வந்துள்ளார். கணவருடன் வாழ முடியாது என்று கூறி, இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதன்பிறகு கணவன் பலமுறை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூறியும் தன்னுடன் வாழ முடியாது எனக் கூறி மறுத்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்கு பல தடவைகள் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பெண்ணின் கணவர் குறித்த பேக்கரி அருகே தங்கியிருந்துள்ளார். அதிகாலை, 2:00 மணியளவில், பேக்கரிக்கு தேவையான வேலைகளைச் செய்வதற்காக அவரது மனைவி சென்றபோது மறைந்திருந்த கணவர், அவரை மார்புப் பகுதி மற்றும் தலைப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM