இன்றைய உலகில் இது மரணதண்டனை இல்லை என்கின்றார் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டுள்ள டெசீரி எட்வேர்ட்ஸ் முன்கூட்டியே கண்டுபிடிப்பதே மிகவும் அவசியமான விடயம் என்பதை மக்கள்புரிந்துகொள்ளவேண்டும் என்கின்றார் அவர்.
22 வருடங்களாக இவர்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். அப்போது எனக்கு 38 வயது நான் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தேன் என்கின்றார் அவர் .
நான் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்தேன் தயங்கினேன் 40வயதி;ற்கு உட்பட்ட எவரையும் அது பாதிக்கும் என அவ்வேளை நம்பவில்லை இதனால் இரண்டு மூன்று மருத்துவர்களிடம் சென்றேன் எனவும் அவர் தெரிவிக்கி;ன்றார்.
புற்றுநோயின் பிடியிலிருந்து விடுபட்ட மற்றுமொரு பெண் மிச்சலே லன்ஞ் இவர் 14 வருடங்களிற்கு முன்னர் பாதிக்கப்பட்டார், அந்த திகதியும் அவருக்கு நன்கு நினைவிருக்கின்றது ஜனவரி 20 - 2009 - பராக் ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்ற தினம்.
எதிர்மறையான கருத்துக்களால் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் குறிப்பாக புற்றுநோய் குறித்த கற்பிதங்களைஅடிப்படையாக கொண்ட கருத்துக்களால் அதிகம் பாதிக்கப்பட்டேன் எனஅவர் தெரிவித்தார்.
இதுஉனது வாழ்வின் முடிவு ஹீமியோ உன்னை கொல்லப்போகின்றது போன்ற எதிர்மறையான கருத்துக்கள் வெளியானதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஜூன் முதல்வாரம் கடைப்பிடிக்கப்படும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிற்கான தினத்தின் போது இவர்கள்இருவரினதும் அனுபவங்களும் வெளியாகியிருந்தன.
இது இந்த நோயிலிருந்து மீண்டவர்களின் கொண்டாட்டத்திற்கான தினம்.
புற்றுநோயின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தினமும் கூட 'புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வலி என்பது ஒரு கட்டம் எனினும் இது சாதாரண நபர்கள் கடக்கவேண்டிய கட்டம் என்கின்றார் எட்வேர்ட்ஸ்.
இது ஒரு இயற்கையான கட்டம் ஆனால் நீங்கள் இந்த கட்டத்திலிருந்து விரைவாக வெளிவரவேண்டும், என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன் நீங்கள் இது சாத்தியமற்ற ஒன்று கருதக்கூடாது என நான் விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
அவரை பொறுத்தவரை உறுதியான நம்பிக்கையும் சாதகமான மனோநிலையும் நோயின் காலத்தில் அவரை காப்பாற்றியது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய மனோநிலையின் அவசியம் குறித்து லைன்சும் கருத்து வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM