ஊழல், மோசடி சட்ட மூலம் அரசாங்கத்துக்கு சார்பானதாக உருவாக்கப்படக்கூடாது - எரான் விக்கிரமரத்ன

Published By: Vishnu

11 Jun, 2023 | 07:30 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊழல் , மோசடி சட்ட மூலம் அரசாங்கத்துக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது. எனவே இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாடு விரைவில் அபிவிருத்தியடைய வேண்டுமெனில் ஊழல் , மோசடிக்கு எதிரான சட்ட மூலம் அவசியமாகும். இது தொடர்பான சட்ட மூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அது அரசாங்கத்துக்கு சார்பாகவே தயாரிக்கப்படவுள்ளது.

உண்மையில் நாட்டில் ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில் ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு சமாந்தரமான சட்ட மூலம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான சட்டமே பலம் மிக்கதாகக் காணப்படும்.

அத்தோடு பொலிஸாரால் மாத்திரம் ஊழல் , மோடிசக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. எனவே இது தொடர்பான நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு மோசடி செய்யப்படும் தொகைக்கு சமாந்தரமான தண்டப்பணம் அறவிடப்பட வேண்டும் என்பதோடு , 10 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட வேண்டும். முறையான சட்ட மூலம், அறிமுகப்படுத்தப்பட்டு அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம்...

2025-01-25 00:51:06
news-image

சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த...

2025-01-25 00:46:15
news-image

வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்...

2025-01-25 00:37:17
news-image

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக...

2025-01-25 00:12:34
news-image

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை வரவேற்று...

2025-01-24 23:59:55
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் :...

2025-01-24 13:22:43
news-image

கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல் ஆகஸ்டில்

2025-01-24 23:47:37
news-image

கண்டி - மஹியங்கனையில் பல வீதிகளை...

2025-01-24 23:44:47
news-image

மஹிந்தவுக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் அதற்கெதிராக முன்னிலையாவோம்...

2025-01-24 16:18:19
news-image

உத்தியோகபூர்வமாக அறிவித்த மறுகணமே மஹிந்த ராஜபக்ஷ...

2025-01-24 17:20:51
news-image

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள...

2025-01-24 16:14:14
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17