தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டமை தமிழ் இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் அவரின் குரலை நசுக்கும் ஒரு நடவடிக்கை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
மருதங்கேணியில் இடம்பெற்ற தனக்கு எதிரான வன்முறைகள் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டமிட்டிருந்தவேளை ஏழாம் திகதி பொலிஸார் அவரை கைதுசெய்தனர் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதை தடுப்பதற்காக அவரை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசென்றனர் என தெரிவித்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்பு தமிழர்களிற்காக குரல்கொடுத்தமைக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை குமார் பொன்னம்பலமும் கொல்லப்பட்டார் என்பதை நினைவுகூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வேறு நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர் ஆனால் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிரான அரச ஒடுக்குமுறையை ஏற்றுக்கொண்டால் கண்டிக்க தவறினால் சாதாரண தமிழ் மக்கள் பொலிஸாரிடமிருந்து எவ்வாறான நிலையை எதிர்கொள்வார்கள் என்பதை சர்வதேச சமூகம் நினைத்துப்பார்க்கவேண்டும்,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனிற்கு எதிரான சம்பவத்திற்கு ஒரு வாரத்தின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது- இது ஐக்கியநாடுகள் மனித உரிமை பிரகடனத்தின் பல சரத்துக்களை மீறி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறையின் தொடர்போக்கை வெளிப்படுத்தியுள்ளது எனவும் ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைகள் மற்றும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் தந்திரோபாயங்களிற்கு எதிராக சர்வதேச சமூகம் எந்தவித தயக்கமும் இன்றி கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என அனைத்துல ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கம் தான் பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவிக்கும் தமிழ்மக்களின் உரிமைகளை மீறுவது அலட்சியம் செய்வதை நிறுத்தவேண்டும் என்ற தெளிவான செய்தியை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் ஜனநாயகம் மனித உரிமைகளை பெறுமதிமிக்கவையாக கருதுபவர்களும் தெரிவித்தால் மாத்திரமே நீதி நிலைநாட்டப்படும் என புலம்பெயர் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக்கிரமித்துள்ள படையினர் தமிழ்மக்களை வன்முறை ரீதியில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர் என்பதை மேற்சொன்ன சம்பவங்கள் புலம்படுத்துகின்றன, யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக பௌத்த ஆலயத்தை அமைக்கும் நடவடிக்கைகளிற்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் இலங்கையில் சிங்களவர்கள் சட்டத்திற்கு அப்பாற்றபட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM