(நெவில் அன்தனி)
லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இந்தியா, அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா குவித்த 469 ஓட்டங்களை விட இது 173 ஓட்டங்கள் குறைவாகும்.
அவுஸ்திரேலியர்கள் சில பிடிகளைத் தவறவிட்டதை சாதகமாக்கிக்கொண்ட அஜின்கியா ரஹானே, ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 109 ஓட்டங்களின் பலனாகவே இந்தியா பெரும் வீழ்ச்சியிலிருந்து தப்பியது.
போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (09) தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, 3ஆவது பந்தில் ஸ்ரீகர் பரத்தின் விக்கெட்டை இழந்தது. ஸ்கொட் போலண்ட் வீசிய பந்தில் பரத் 5 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.
ஆனால், அதன் பின்னர் ரஹானேயினதும் தாகூரினதும் பிடிகளைத் தவறவிட்டது அவுஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. மதியபோசன இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்தியா 6 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தாகூர் 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பெட் கமின்ஸின் பந்துவீச்சில் கொடுக்கப்ட்ட இலகுவான பிடியை கெமரன் க்றீன் தவறவிட்டார். பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் கமின்ஸின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் தாகூர் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார். ஆனால், மத்தியஸ்தரின் தீர்ப்பை தாகூர் மீளாய்வுக்கு உட்படுத்தியபோது கமின்ஸ் வீசிய பந்து நோ போலாக அறிவிக்கப்பட்டது.
வியாழனன்றும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. ரஹானே 17 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கமின்ஸின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ரஹானே ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார். ஆனால் ரஹானே கோரிய மீளாய்வில் கமின்ஸின் பந்து நோபோல் என தீர்மானிக்கப்பட்டது.
இன்றைய தினம் ரஹானே 72 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கமின்ஸின் பந்துவீச்சில் கொடுத்த பிடியை விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி தவறவிட்டார்.
எவ்வாறாயினும் மதியபோசன இடைவேளைக்குப் பின்னர் 9.4 ஓவர்களே தாக்குப் பிடித்த இந்தியா மேலதிமாக 36 ஓட்டங்களைப் பெற்று கடைசி 4 விக்கெட்களை இழந்தது.
இடைவேளையின் பின்னர் 2ஆவது ஓவரில் நெதன் லயனின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித்திடம் பிடிகொடுத்த அஜின்கியா ரஹானே 89 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
உமேஷ் யாதவ் 5 ஓட்டங்களுடன் கமின்ஸினால் போல்ட் செய்யப்பட்டார்.
மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷர்துல் தாகூர் தனது 4ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த நிலையில் கெமரன் க்றீனின் பந்துவிச்சில அலெக் கேரியிடம் பிடிகொடுத்து 51 ஓட்டங்களுடன் களம்விட்டு வெளியேறினார்.
மொஹமத் சமி 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஸ்டார்க்கின் பந்துவீச்சில் கேரியிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெமரன் க்றீன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலியா அதன் 2ஆவது இன்னிங்ஸில் சற்று நேரத்திற்கு முன்னர் ஒரு விக்கெட்டை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. வோர்னர் ஒரு ஓட்டத்துடன் மொஹமத் சிராஜின் பந்துவீச்சில் பரத்திடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM