நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை. கௌரவமானதொரு அரசியல் கலாசாரத்தையே விரும்புகின்றேன். தவறு செய்து வெல்வதை விட, நல்லது செய்துவிட்டு தோற்றால் கூட அது நிம்மதிதான். எனவே, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என எதிரணியில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (9) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு:
எனது அமைச்சு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் நேற்று கேள்வியொன்று எழுப்பப்பட்டிருந்தது. அவ்வேளை, நான் சபையில் இருக்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தேன். நாட்டில் மின் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாததால் மாதம் 425 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது.
மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இதனை செலவிடுகின்றோம். இவ்விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அந்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளது. பதில்களை நாம் சபையில் சமர்ப்பித்திருந்தோம். அப்படி இருந்தும் துறைசார் அமைச்சர் ஏன் சபையில் இல்லை என கேள்வி எழுப்பட்டுள்ளதுடன், அரசியல் நாகரிகமற்ற வகையில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு வேட்டைக்காக நான் அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை. நான் இந்த நாட்டை நேசிக்கும் ஓர் இளைஞன். நாட்டை முன்னோக்கி கொண்டுவரவே நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எனவே, பொறுப்பில்லை என கூறுவதை ஏற்க முடியாது.
நாட்டில் கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி காலங்களில் நாம் மக்களுடன் இருந்தோம். மாறாக, காட்டுக்கு சென்று மிருகங்களை படம் பிடிக்கவில்லை. எனவே, எல்லா விடயங்களையும் அரசியலாக்குவது கீழ்த்தரமான செயற்பாடாகும்.
நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும். சமூர்த்தி பயனாளிகள், நலன்புரி உதவிகளை பெறுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அதிகமாக நீரைப் பயன்படுத்தும் 20 வீதமானவர்களுக்குத்தான் விலை உயர்வு தாக்கமாக அமையும்.
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளையில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். மக்களும் பங்கேற்றிருந்தனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அதில் பங்கேற்கவில்லை. மன்னிப்பு கோருமாறு வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். அந்த மன்னிப்பு இன்னும் கேட்கப்படவில்லை. ஆகவே, கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய முற்படக்கூடாது.
நல்லாட்சியில் வீடமைப்புத்துறை அமைச்சராக சஜித் பிரேமதாஸதான் பதவி வகித்தார். ஆனால், தோட்ட வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை. நல்லாட்சியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு கூட நான்தான் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்து, வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்தினேன். தவறு செய்து வெல்வதற்கு பதிலாக சரியானதை செய்துவிட்டு தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை.
அதேவேளை, அநாகரிகமான அரசியல் விமர்சனங்களை கைவிடுமாறு நான் கூறியிருந்தேன். ஆனால், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு முத்திரை வெளியிடுவது வெட்கக்கேடு என கூறியுள்ளார்.
3 லட்சம் பேருக்கு முகவரி பெற்றுக்கொடுத்து, சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த ஒருவரை இப்படி விமர்சிக்கக் கூடாது. கண்டியில் இடம்பெற்றுள்ள காணி மோசடியுடன் இவருக்கு தொடர்புள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM