அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான காண்டாஸ், தனது விமான ஊழியர்களுக்கான பாலின அடிப்படையிலான சீருடை விதிகளை நீக்கியுள்ளது.
இதன்படி, விமானச் சிப்பந்திகளான பெண்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணியாமல் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண் சிப்பந்திகளும் மேக் அப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்ள்ளது.
நவீன எதிர்பார்ப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கும், பல்லினக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு சீருடைகள் சௌகரியமாக இருப்பதற்காகவும் இந்த விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக காண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண் ஊழியர்கள் கட்டாயமாக மேக் அணிய வேண்டும் என்பதுபோன்ற விதிகளை நீக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிவந்த நிலையில் இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, மேக் அணிய வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கும், விரும்பினால் தட்டையான பாதணிகளை அணிவதற்கும் ஊழியர்களுக்கு அனுமி வழங்கப்பட்டுள்ளது. வைர காதணிகளக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைக்கடிகாரத்தின் அளவு, வடிவம் ஆகியன தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM