(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளோம். என்றாலும் இந்த அதிகரிப்பின்போது சமுர்த்தி பயனாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன் புரி திட்டங்களுக்கு உட்பட்டோருக்கு நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீர் கட்டணத்தை நாங்கள் அதிகரிப்போம். நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நீர் கட்டண அறவீடுகளின்படி ஒவ்வொரு மாதமும் 425 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட முடியாது.
இந்தளவு பாரிய நிதி இருக்குமானால் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகி யிருக்கும் மலையக மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுக்க அதனை உபயோகப்படுத்த முடியும். அதேநேரம் நீர் கட்டணம் அதிகரிக்கும்போது நாங்கள் சமூர்த்தி பயனாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன் புரி திட்டங்களுக்கு உட்பட்டோருக்கு நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. நீர் பாவனையாளர்களில் 20 சதவீதமானவர்களே இந்த நீர் கட்டண அதிகரிப்புக்குள் உள்வாங்குவார்கள்.
அத்துடன் நீர் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் கடந்த 3மாதங்களாக ஆராய்ந்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விசேட கலந்துரையாடல் ஒன்று எங்களுக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்றது. அதற்கு சாகல ரத்நாயக்க தலைமை தாங்கி இருந்தார். எவ்வாறெனினும் அந்த கலந்தரையாடலில் இருக்கும் நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சபையில் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்த கேள்விக்கான பதிலையும் சபைக்கு சமர்ப்பித்திருந்தேன்.
என்றாலும் நான் சபையில் இல்லாதமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் இருக்கும் ஒருவர், அது தொடர்பில் விமர்சித்துள்ளார். எங்களுக்கு பொறுப்பில்லை என தெரிவிப்பதற்கு இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. நாங்கள் வாக்குகளுக்கு இந்த அமைச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டை முன்னேற்றுவதற்காக எங்களால் முடிந்த சேவையை மேற்கொள்வதே எனது நோக்கம். அதனால் நான் எனது பொறுப்பை சரியாக செய்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM