அவுஸ்திரேலிய இந்திய அணிகளிற்கு இடையிலான உலகடெஸ்ட்சம்பியன்சிப் போட்டியில் இந்திய அணியின் சுப்மன்கில்லை ஆட்டமிழக்கச்செய்த பந்து குறித்த பந்து குறி;த்து கிரிக்கெட் உலகம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் ஸ்கொட் பொலன்டின் பந்து குறித்து சமூக ஊடகங்களில் அதிகளவு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இந்த போட்டியில் இதுவரை வீசப்பட்ட மிகச்சிறந்த பந்து என கிரிக்விஸ் டேட்டா தெரிவித்துள்ளது.
ஓவலில் நேற்யை தினம் 3 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி 469 ஓட்டங்களிற்கு ஆட்டமிழக்கச்செய்தது.
இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தவேளை முதல் மூன்று ஓவர்களிலேயே 22 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஸ்டார்க் இரண்டு ஓவர்களை வீசிய பின்னர் அவரை மாற்றிய பட்கம்மின்ஸ் ஸ்கொட்பொலன்டை பந்து வீச அழைத்தார் மறுமுனையில் கம்மின்ஸ் ரோகித்சர்மாவை ஆட்டமிழக்கச்செய்தார்.
தனது முதல் ஓவரை ரோகித் சர்மாவிற்கு மெய்டன்ஓவராக வீசிய ஸ்கொட்பொலன்ட் அடுத்த ஓவரை கில்லிற்கு வீசினார்.
மூன்று பந்துகளை ஓவ்ஸ்டம்பிற்கு சற்று வெளியே அவர் வீசியதால் மூன்று பந்துகளையும் கில் விளையாடவேண்டியிருந்தது - கில் சிறப்பாக அவற்றை தடுத்தாடினார்.
நான்காவது பந்தையும் போலன்ட்ஓவ்ஸ்டம்பிற்கு சற்று வெளியே வீசினார்,அந்த பந்தும் வெளியே செல்லும் என கில் நினைத்தார், அந்த பந்தை ஆடாமல்விட்டார், ஆனால் பந்து நினைக்கமுடியாத விதத்தில் ஓவ்ஸ்டம்பை வீழ்த்தியது.
கிரிக்விஸ் போலண்டின் நேற்றைய பந்தே நேற்று வீசப்பட்ட பந்துகளில் சிறப்பானது என தெரிவித்துள்ளதாக விஸ்டென் தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டின் பின்னர் இங்கிலாந்தில் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளில் பத்தாவது சிறப்பான பந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்து கில்லை வீழ்த்துவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒன்றாகவே காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கில்லை ஆட்டமிழக்கச்செய்யமுடிந்தமை குறித்து ஸ்கொட்பொலன்ட் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
நான் இந்த டெஸ்ட் ஆரம்பமாவதற்கு முன்னர் பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் காண்ப்பட்டேன் என தெரிவித்துள்ள அவர் ஆனால் இந்த போட்டியின் ஒரு பகுதியாகயிருப்பது மிகப்பெரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கில் திறமைவாய்ந்த வீரர் அவரைஆரம்பத்திலேயே ஆட்டமிழக்ச்செய்தது திருப்தியளிக்கின்றது இரண்டாவது நாள் முடிவில் எங்கள் அணி சாதகமான நிலையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM