சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச்செய்த ஸ்கொட்பொலன்டின் பந்து -கிரிக்கெட் ரசிகர்களின் மனதில்தனி இடத்தை பிடித்தது

Published By: Rajeeban

09 Jun, 2023 | 02:29 PM
image

அவுஸ்திரேலிய இந்திய அணிகளிற்கு இடையிலான  உலகடெஸ்ட்சம்பியன்சிப் போட்டியில் இந்திய அணியின் சுப்மன்கில்லை ஆட்டமிழக்கச்செய்த பந்து குறித்த பந்து குறி;த்து கிரிக்கெட் உலகம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் ஸ்கொட் பொலன்டின் பந்து குறித்து சமூக ஊடகங்களில் அதிகளவு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்த போட்டியில் இதுவரை வீசப்பட்ட மிகச்சிறந்த பந்து என  கிரிக்விஸ் டேட்டா தெரிவித்துள்ளது.

ஓவலில் நேற்யை தினம் 3 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியை  இந்திய அணி 469 ஓட்டங்களிற்கு ஆட்டமிழக்கச்செய்தது.

இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தவேளை முதல் மூன்று ஓவர்களிலேயே 22 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஸ்டார்க் இரண்டு ஓவர்களை வீசிய பின்னர் அவரை மாற்றிய பட்கம்மின்ஸ் ஸ்கொட்பொலன்டை பந்து வீச அழைத்தார் மறுமுனையில் கம்மின்ஸ் ரோகித்சர்மாவை ஆட்டமிழக்கச்செய்தார்.

தனது முதல் ஓவரை ரோகித் சர்மாவிற்கு மெய்டன்ஓவராக வீசிய  ஸ்கொட்பொலன்ட் அடுத்த ஓவரை கில்லிற்கு வீசினார்.

மூன்று பந்துகளை ஓவ்ஸ்டம்பிற்கு சற்று வெளியே அவர் வீசியதால் மூன்று பந்துகளையும்  கில் விளையாடவேண்டியிருந்தது - கில் சிறப்பாக அவற்றை தடுத்தாடினார்.

நான்காவது பந்தையும் போலன்ட்ஓவ்ஸ்டம்பிற்கு சற்று வெளியே வீசினார்,அந்த பந்தும் வெளியே செல்லும் என கில் நினைத்தார், அந்த பந்தை ஆடாமல்விட்டார், ஆனால் பந்து நினைக்கமுடியாத விதத்தில் ஓவ்ஸ்டம்பை வீழ்த்தியது.

கிரிக்விஸ் போலண்டின் நேற்றைய பந்தே நேற்று வீசப்பட்ட பந்துகளில் சிறப்பானது என தெரிவித்துள்ளதாக விஸ்டென் தெரிவித்துள்ளது.

2006ம் ஆண்டின் பின்னர் இங்கிலாந்தில் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளில் பத்தாவது சிறப்பான பந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பந்து கில்லை வீழ்த்துவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒன்றாகவே காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கில்லை ஆட்டமிழக்கச்செய்யமுடிந்தமை குறித்து  ஸ்கொட்பொலன்ட் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

நான் இந்த டெஸ்ட் ஆரம்பமாவதற்கு முன்னர் பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் காண்ப்பட்டேன் என தெரிவித்துள்ள அவர் ஆனால் இந்த போட்டியின் ஒரு பகுதியாகயிருப்பது மிகப்பெரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கில் திறமைவாய்ந்த வீரர் அவரைஆரம்பத்திலேயே ஆட்டமிழக்ச்செய்தது திருப்தியளிக்கின்றது இரண்டாவது நாள் முடிவில் எங்கள் அணி சாதகமான நிலையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59
news-image

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக...

2023-09-27 09:51:56
news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59