யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்துக்கு தண்டப்பணம் விதிப்பு

Published By: Nanthini

09 Jun, 2023 | 12:02 PM
image

யாழ்ப்பாணம், கன்னாதிட்டி சந்திக்கு அருகில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் தொடர்பான வழக்கில் வியாழக்கிழமை (8) யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றம் உணவக உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 10ஆம் திகதி யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள ஓர் உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை கண்டறியப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, மே மாதம் 12ஆம் திகதி உணவக உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதவான் கடையினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகரால் கடை சீல் வைத்து மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை (8) குறித்த வழக்கு நீதிமன்றில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உணவக உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அத்துடன், உணவக திருத்த வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கடையினை மீள திறப்பதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36