வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் இரகசிய ஆவணங்களை கையாண்டவிதம் குறித்து அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னரும் தான் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக டிரம்ப் தெரிவிக்கும் குரல்தபதிவொன்று தங்களிற்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதவியிலிருந்து விலகி ஆறு மாதங்களின் பின்னர் 2021 ஜூலை மாதம் டிரம்பின் நியுயேர்சி கோல்ப்கிளப்பில் இடம்பெற்ற சந்திப்பில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
சிஎன்என் இது குறித்த விபரங்களை முதலில் அம்பலப்படுத்தியிருந்தது பின்னர் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள் மூலம் பிபிசியும் அதனை உறுதி செய்திருந்தது.இதனடிப்படையிலேயே நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.டிரம்பிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு இது இடம்பெறும் என கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.இது அமெரிக்காவிற்கு கருப்புதினம் மிகவேகமாக பாரதூரமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற நாடாக நாங்கள் காணப்படுகின்றோம் மீண்டும் அதனை வலிமையானதாக்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM