அடுத்த வாரம் முதல் ஒரு மூடை யூரியா உரத்தை 9,000 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர

Published By: Vishnu

08 Jun, 2023 | 08:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உரங்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். 

அத்துடன்  தற்போது 19,500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றுக்கு  4500 ரூபா விலைக் குறைப்புடன் 15,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உரங்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். 

அத்துடன்  தற்போது 19,500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றுக்கு  4500 ரூபா விலைக் குறைப்புடன் 15,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை, உர நிவாரணமாக வழங்கப்படும் நிதியை அடுத்த போகம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்போது விவசாயிகள் தமக்கு விருப்பமான இடத்தில் விருப்பமான உரங்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

உர விற்பனை நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கம் விலக மாட்டாது. இப்போதும் 25000 மெட்ரிக் தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கு டெண்டர் பத்திரம் கோரப்பட்டுள்ளது. 

தனியார் துறையுடன் போட்டித் தன்மையுடன் செயற்பட்டு குறைந்த விலையில் உரத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாகும் நோக்குடன் சில அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணங்களை முறையாக பெற்றுக் கொடுப்பதில்லை  அத்தகையோருக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம்...

2025-01-20 23:14:53
news-image

22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள்...

2025-01-20 23:08:29
news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14