ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் காஞ்சன

Published By: Vishnu

08 Jun, 2023 | 01:35 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து அவர்களுக்கெதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய  சேமிப்பு முனையங்களின் அதிகாரிகளுடன் புதன்கிழமை (7) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மாத்திரமே கடந்த வாரம் சகல எரிபொருட்களிலும் குறைந்தபட்ச கையிருப்பை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.

255 எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எந்தவொரு எரிபொருளிலும் குறைந்த பட்ச இருப்பை பேணத் தவறியுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது.

அதேவேளை 363 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏதேனும் ஒரு எரிபொருள் இருப்பு மாத்திரமே பேணப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு ஒப்பந்தங்களுக்கு முரணாக செயற்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 18 மாதங்களுக்கான எரிபொருள் களஞ்சிய திட்டம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பு , போக்குவரத்து பவுசர்களுக்கான கொடுப்பனவுகள், தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை விநியோகம், நாடளாவிய எரிபொருள் விநியோகத் திட்டம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவை தொடர்பிலும் இதன் போது மீளாய்வு செய்யப்படதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15
news-image

புதிய கிராம அலுவலரை நியமிக்குமாறு கோரி...

2025-03-25 16:14:00
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; பிரதான...

2025-03-25 16:02:08
news-image

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை...

2025-03-25 15:49:05
news-image

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுங்கள்...

2025-03-25 16:06:25