அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி வரவேண்டுமா ? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

Published By: Vishnu

08 Jun, 2023 | 02:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவியை ஹர்ஷடி சில்வாவுக்கு வழங்குமாறு தொடர்ந்து தெரிவித்து வந்தபோதும் அதனை திட்டமிட்டு அரச தரப்பு நிராகரித்து வந்தது.

ஆனால் தற்போது நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அதனால் அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை  நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து நியமிக்க வேண்டுமா என கேட்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறிது காலம் கடந்தாவது அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவியை ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கியமை தொடர்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இருந்தபோதும் அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவியை அதற்கு தகுதியான ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதும் அவருக்கு தலைவர் பதவி கிடைக்காமல் இருப்பதற்கு சிலர் சதித்திட்டங்களை மேற்கொண்டுவந்தனர்.

அதேநேரம் தற்போது ஹர்ஷடி சில்வா அரசாங்க நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இருந்தபோதும் அவரை தலைவராக நியமிக்க நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்தா இதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறேன்.

தாமதித்தேனும் இந்த பதவியை ஹர்ஷடி சில்வாவுக்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அவருக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

இருந்தாலும்  நிலையியற் கட்டளையில் இல்லாத ஒன்றே இடம்பெற்றிருக்கிறது. ஜனாதிபதி வந்ததுதான் அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு நியமனம் வழங்க வேண்டும் என்றால் நிலையியற் கட்டளை தேவையில்லை.

அத்துடன் பல மாதங்களாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. அதில் பயங்கரமான விடயம் என்ன வென்றால், அந்த காலப்பகுதியில் சட்டவிராேதமான முறையில் பதில் தலைவர்களை நியமித்துக்கொண்டு, எந்தவித ஆய்வும் மேற்பார்வையும் இல்லாமல்  சட்ட திட்டங்களை கொண்டுவர அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

எனவே பாராளுமன்றத்தின் கெளரவம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நிலையியற் கட்டளைகளை பாதுகாத்து, அதன் பிரகாரம் செயற்படுவது சபாநாயகராகிய உங்களது பொறுப்பாகும்.

இல்லாவிட்டால் அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் என புதிய நிலையியற் கட்டளை ஒன்றை கொண்டுவர வேண்டிவரும் வரும், அத்துடன் ஹர்ஷ டிசில்வாவை அரசாங்க நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கவேண்டும் என்ற உறுதியாக இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தபோது, நிலையியற் கட்டளையை மீறி ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, நிதிக்குழுவின் தலைவரை நியமிக்கவேண்டிய நிலை ஏற்பட்டடிமை தொடர்பில் கவலையை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமை ஏற்படமாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து, நிலையியற் கட்டளையின் அடிப்படையில் செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47