கனடாவில் மூண்டுள்ள காட்டுதீயினால் உருவாகியுள்ள புகைமண்டலம் தென்பகுதி நோக்கி நகர்வதால் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களிற்கு மாசடைந்த வளி குறித்து எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் காட்டுத்தீயின் புகைதெற்காக நகர்ந்து அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களில் வானத்தை இருண்ட பழுப்பு நிறமாக மாற்றியுள்ளது.வளி மாசடைந்ததாக மாறியுள்ளது.
நியூயோர்க் உட்பட அமெரிக்காவின் கிழக்கு பகுதி நகரங்கள் மாசடைந்த வளி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
பொதுமக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
நியூயோர்க்கில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. நியூயோர்க்கில் பொதுமக்கள் வெளியே செல்வதை முடிந்தளவில் குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோள் வெளியாகியுள்ளது,பாடசாலைகள் பொதுநிகழ்வுகளை இரத்துச்செய்துள்ளன.
மேமாதம் முதல் கனடாவின் காட்டுதீயினால் ஏற்பட்ட புகைமண்டலம் அமெரிக்காவை நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் மேல்மாகாணம் முதல் கிழக்கு வரை சுமார் 150 காட்டுதீக்கள் காணப்படுகின்றன.
நியூயோர்க்கில் செவ்வாய்கிழமை புகைமண்டலத்தின் வாசனையை உணரமுடிந்தது,செவ்வாய் மாலைவானம் பழுப்பு நிறத்தில் மாறியது சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் பார்க்ககூடிய நிலை குறைவடைந்தது,
புதன்கிழமையும் புகைமண்டலத்தின் வாசனை தொடர்ந்ததால் வளியின் தரம் குறித்த எச்சரிக்கை நியூயோர்க்கில் தொடரக்கூடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM