சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

Published By: Vishnu

07 Jun, 2023 | 09:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் தேசிய உற்பத்திக்கு பாரிய பங்களிப்பு செய்துவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அதனை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கடசித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்டைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. ,இவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் பட்சத்தில், நாட்டில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான உதாரணங்களைக் காண முடியும். 

பொருளாதார நெருக்கடி, ,அதிக வட்டி விகிதங்கள்,லீஸிங் மாபியா,மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி,அரசின் வரிக் கொள்கை போன்றவற்றால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வுகளை வழங்க முடிந்தால் உலக உற்பத்தியில் முதலிடத்தில் எமது நாட்டை ஸ்தானப்படுத்த முடியும்.

மேலும் நாட்டின் தொழிலாளர்களில் 45வீதமானவர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களாகும். அதேபோன்று ஏற்றுமதி அபிலிருத்தி சபையின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் தேசிய உற்பத்திக்கு 52வீத பங்களிப்பை வழங்குவது சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளாகும். 

கிராமிய அவிருத்திக்கு பெரும் சக்தியாக இருப்பதுடன் உள்நாட்டு தொழிற்சாலை வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

அத்துடன் உலகின் பல நாடுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்தியிருக்கின்றன. எமது நாட்டில் அத்தகைய கவனம் செலுத்தப்படவில்லை என்பது துர்ப்பாக்கிய நிலை.

நாட்டின் பொருளாதாரத்தின் எஞ்ஜின் என்று அழைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில்துறையினர் மீது அரசாங்கம் இப்போதாவது கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52