நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது ?  கபீர் ஹாசிம் கேள்வி

Published By: Vishnu

07 Jun, 2023 | 09:58 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய தொழில் துறையினருக்கு நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை. 

நிவாரணம் வழங்கலுக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன என்பதை ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற  சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நாட்டு மக்களுக்கு அண்மையில் ஆற்றிய உரையில் நான்கு பிரதான வழிமுறைகளில் 2048 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக குறிப்பிட்டார்.பொருளாதார பாதிப்புக்கு முன்னனி வகித்தவர்களுடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி செயற்படுகிறார்.ஆகவே 2048 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1948 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.

நாட்டின் கடன் நிலையை ஸ்திரப்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக வங்கி வட்டி கடன் வட்டி வீதம்,மின்சார கட்டணம் ,நீர் கட்டணம் உட்பட சேவை துறைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் வட்டி வீதம் அதிகரிப்பால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர்,கைத்தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தொழிற்துறையினர் தாம் எதிர்கொண்டுள்ள  நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை முன்வைத்தும் இதுவரை நியாயமான தீர்வு ஒன்று கிடைக்கப் பெறவில்லை.

வங்கி கடன் தவணை செலுத்தலில் காலவகாசம் வழங்கல் அல்லது வட்டி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் முன்வைத்துள்ளார்கள். தொழில் முயற்சியாளர்களின் கடன்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில்  சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இந்த நிவாரணம் தொழில் முயற்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.

அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், முக்கிய தொழில் பிரமுகர்கள் ஆகியோருக்கு இடையிலான நல்லிணக்கத்தின் அடிப்படையில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆகவே மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை செயற்படுத்தாதது ஏன் என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

2025-03-23 09:13:17
news-image

பிரதமர் மோடியின் விஜயத்திற்கு முன்னர் அமெரிக்கா...

2025-03-23 09:12:36
news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51