நாவற்குழியில் 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சி

Published By: Nanthini

07 Jun, 2023 | 02:47 PM
image

(எம்.நியூட்டன்)

லக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் நாவற்குழியில் திங்கட்கிழமை (5) 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. 

தமிழ் தேசிய பசுமை இயக்கமானது மாணவர்களிடையே சூழல் பற்றிய அறிவைப் புகட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களை சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் 'பசுமை அறிவொளி' என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாகவே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழி, முத்தமிழ் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

இவ்வருடம் ‘பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசினை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளை ஐக்கிய நாடுகள் சபை தெரிவுசெய்துள்ளது. 

இதற்கமைய, இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘பிளாஸ்டிக்கின் பிடியில்’ என்ற கையேட்டினையும் வழங்கிவைத்தார். 

அத்தோடு, டொரன்டோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு மாணவர்கள் அனைவருக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31