நாவற்குழியில் 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சி

Published By: Nanthini

07 Jun, 2023 | 02:47 PM
image

(எம்.நியூட்டன்)

லக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் நாவற்குழியில் திங்கட்கிழமை (5) 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. 

தமிழ் தேசிய பசுமை இயக்கமானது மாணவர்களிடையே சூழல் பற்றிய அறிவைப் புகட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களை சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் 'பசுமை அறிவொளி' என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாகவே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழி, முத்தமிழ் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

இவ்வருடம் ‘பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசினை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளை ஐக்கிய நாடுகள் சபை தெரிவுசெய்துள்ளது. 

இதற்கமைய, இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘பிளாஸ்டிக்கின் பிடியில்’ என்ற கையேட்டினையும் வழங்கிவைத்தார். 

அத்தோடு, டொரன்டோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு மாணவர்கள் அனைவருக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46