தனது வீட்டு தோட்டக் கிணற்றில் உடலைக் கழுவிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மாணவி தனது உடலைக் கழுவிய பின்னர் துவாய் ஒன்றை அணிந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது இருட்டில் மறைந்திருந்த ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில் மாணவி எழுப்பிய அலறல் சத்தம் கேட்ட தாய் உடனடியாக அங்கு சென்று மாணவியை பாதுகாத்து வீட்டுக்குச் அழைத்துச் சென்று பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM