தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயகத்தை மீறும் செயற்பாடாகும் - சிவநேசதுரை சந்திரகாந்தன்

Published By: Vishnu

06 Jun, 2023 | 06:30 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

தேர்தலை தொடர்ந்து இழுபறி நிலைக்கு உள்ளாக்குவது  ஜனநாயக பண்புகளை மீறுவதுடன்,உள்ளூரில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது எனது பார்வையாகும். 

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் பிராந்தியங்களின் அதிகாரங்களும், பிரதேசங்களின் அதிகாரமும் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற  சிவில் விமான சேவை மற்றும் கப்பற்துறை சேவை  சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி  ரணில்  விக்கிரமசிங்க நெருக்கடியான சூழ்நிலையில் தான் பிரதமராக பதவியேற்றார். 

நாடு அரசியல் மற்றும் பொருளாதாரம் ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தின் போது தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று நிலைமையை சீர்செய்துள்ளார்.

கடந்த  ஆண்டு நாடு பற்றியெறிந்து பொருளாதாரத்தில் பின்னவடைவில் இருந்த போது அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாது இருந்த வேளை இந்த நாட்டை பொறுப்பேற்க முடியாது என்று பலரும் கூறிய நிலையில் ரணில் விக்கிரமசிங்க தற்துணிவுடன் அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி  தனது அனுபவங்களின் மூலம் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டு வருவதுடன், நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்கின்றார். 

இதன்படி வடக்கு மற்றும்  கிழக்கில் அதிகார பகிர்வு மாகாண சபைகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு  தமிழர்களை ஆளுநர்களாக நியமித்துள்ளார். அதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானை நியமிக்கப்பட்டுள்ளார். 

200 வருடங்களுக்கு முன்னர் இங்கே தொழிலுக்காக கொண்டு வரப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கையில் அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வந்த தலைவர்களின் வரிசையில் வந்த வாரிசுகள் கிழக்கு மாகாணத்திற்கு வந்து பணி செய்வதனை மேம்பட்டதாக பார்க்கின்றேன்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்று கூறுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தலை நடத்தாது தொடர்ந்து பிற்போடுவதை  தனிப்பட்ட ரீதியில் நான் ஏற்கவில்லை.

தேர்தலை தொடர்ந்து இழுபறி நிலைக்கு உள்ளாக்குவது  ஜனநாயக பண்புகளை மீறுவதுடன்,உள்ளூரில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது எனது பார்வையாகும். 

எனினும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் பிராந்தியங்களின் அதிகாரங்களும், பிரதேசங்களின் அதிகாரமும் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் சாரதிகளுக்கு அதிரடி சோதனை: போதைப்பொருள்...

2026-01-24 11:55:05
news-image

நாவலப்பிட்டியில் ஆறாம் தர கல்வி சீர்திருத்தத்திற்கு...

2026-01-24 11:46:10
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

2026-01-24 11:42:34
news-image

நுவரெலியாவில் உறைபனி பொழிவு: மக்களின் இயல்பு...

2026-01-24 11:16:06
news-image

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் வெனிசுலா வெளிவிவகார...

2026-01-24 10:54:27
news-image

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில்...

2026-01-24 10:40:30
news-image

கொஹுவலை கொலை சம்பவம் ; பொலிஸாரால்...

2026-01-24 10:20:59
news-image

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து யுவதி...

2026-01-24 10:20:01
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல்...

2026-01-24 10:03:06
news-image

துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள்...

2026-01-24 09:53:42
news-image

மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி...

2026-01-24 11:37:23
news-image

ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை...

2026-01-24 09:22:09