(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
இந்தியா, ஒடிசா மாநிலத்தில் புகையிரத விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழ் மக்கள் சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் உயரிய சபை ஊடாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்த ஆண்டில் பதிவான மோசமான விபத்தாகவும், மனித குலம் எதிர்கொண்ட பாரிய அழிவாகவும் இந்த புகையிரத விபத்து பதிவாகியுள்ளது. கொத்துக் கொத்தாக உறவுகள் உயிரிழந்தமை பாரிய வேதனைக்குரியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறானதொரு பேரவலத்தை நாங்கள் 2009ஆம் ஆண்டு எதிர்கொண்டோம். கொத்துக் கொத்தாக எமது உறவுகள் கொல்லப்பட்டு கண்ட இடங்களில் குழி தோண்டி புதைக்கப்பட்ட வரலாற்றை பார்த்த எமக்கு இந்த விபத்துச் சம்பவம் பாரிய வேதனையளித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM