எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்  கொலை! 

Published By: Vishnu

04 Jun, 2023 | 03:27 PM
image

எஹலியகொட பன்னில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்  சனிக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பன்னில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் உறவினர்கள் தானசாலை வழங்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, குறித்த இளைஞர் அந்த இடத்துக்குச் சென்று தனது பணப்பையில் இருந்த பணத்தை காணவில்லை என்று கூறியபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணையில் உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47