மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டமூலம் : அரசாங்கம் அறிவிப்பு

Published By: Nanthini

04 Jun, 2023 | 02:18 PM
image

(ஆர்.ராம்)

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இறுதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இது குறித்து தெரிவிக்கையில்,

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதில் நாம் அதிகளவான சிரத்தையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் அந்த ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதனையடுத்து, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை கூட்டுவதோடு, குறித்த சட்டமூலம் தொடர்பாக பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி, அனைவரின் கருத்துக்களையும் உள்ளீர்க்கவுள்ளோம்.

தொடர்ந்து பூரணமான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்தச் செயற்பாட்டில் அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47