தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

04 Jun, 2023 | 01:13 PM
image

தெஹியத்தகண்டி, ஹெனானிகல தெற்கு பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் இன்று (4) காலை நீராடிக்கொண்டிருந்த ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 17 மற்றும் 19 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். 

தெஹியத்தகண்டி, ஹெனானிகல பிரதேசத்துக்கு  நேற்று (03) பேருந்தில் 50 பேர் கொண்ட குழு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று (04) காலை இவர்கள் இருவரும் உள்ளடங்கிய குழுவினர் நீராடிக்கொண்டிருந்தபோதே குறித்த இரண்டு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஏனையவர்களின் அலறல் சத்தம் கேட்டு பிரதேசவாசிகள் அங்கு சென்று,   இரு இளைஞர்களையும் மீட்டு தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், இவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06