நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம் வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

Published By: Nanthini

04 Jun, 2023 | 12:23 PM
image

சரியானதை மாத்திரமே செய்கிறேன். எனவே, நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த புதன்கிழமை (மே 31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியபோது, ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஜனாதிபதி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சாகல ரத்நாயக்க, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்போது "உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். தற்போது இங்கு நீங்கள் வந்திருப்பதை அறிந்தால் என்ன செய்வார்கள் என்று தெரியாது" என ஜனாதிபதி வடிவேல் சுரேஷை நோக்கி கூறியுள்ளார். 

அதற்கு வடிவேல் சுரேஷ், "நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். சரியானதை மாத்திரமே செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

மேலும், அந்த சந்திப்பில் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். 

குறிப்பாக, மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31