கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?- உயிர் தப்பி சென்னை திரும்பியவர்கள் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

03 Jun, 2023 | 08:36 PM
image

கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து அந்த ரயிலில் பயணித்து உயிர் தப்பியவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி

நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின், பாலசோர்

அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகிலுள்ள மற்றொரு

தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அடுத்த சில நிமிடங்களில் அதே வழியில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக உள்ளூர் மக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்பு பணியில் தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

விடிய விடிய நடந்த இந்த மீட்பு பணியில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துகுள்ளான ரயில் வண்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை பயணம் செய்ததாகவும்,இதில் 30 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய 3 பேர், விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி கூறியதாவது:

கோரமண்டல் ரயில் வண்டியில் பி8 பெட்டியில் பயணித்திருந்தோம், எனக்கு முன்னால் இருந்த பெட்டிகள் தடம் புரண்டு பெரிய விபத்து ஏற்பட்டது. ஆனால் நான் இருந்த பெட்டியில், பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. ரயில் வண்டி குலுங்க மட்டுமே செய்தது. விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை இருந்ததால் அங்கிருந்து நடந்து வந்து பேருந்து மூலம் புவனேஸ்வர் அடைந்தோம்.  பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தோம். தமிழ்நாடு அரசு சார்பிலும் ரயில்வே நிர்வாகம் சார்பிலும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்ததாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாகேந்திரன் என்பவர் கூறியதாவது:

கடவுள் கொடுத்த மறு வாய்ப்பாக இதை பார்க்கிறேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு உள்ளூர் மக்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரசு உதவி இல்லாமல் தாங்களாகவே சென்னை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு...

2025-01-17 19:53:13
news-image

இம்ரானிற்கு 14 வருட சிறை -...

2025-01-17 14:30:36
news-image

'அதிசயங்கள் நிகழ்வது வழமை - எனது...

2025-01-17 12:53:44
news-image

அதிகளவு செல்வத்தையும் அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள...

2025-01-17 12:36:51
news-image

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் பெரும் துயரத்தை...

2025-01-17 11:14:49
news-image

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல்...

2025-01-16 15:10:39
news-image

புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபடத்தொடங்கியுள்ளேன்- பிரிட்டிஸ் இளவரசி

2025-01-16 14:10:11
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரை யுத்த குற்றவாளி...

2025-01-16 11:21:48
news-image

யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னரும் காசாவில்...

2025-01-16 10:42:56
news-image

துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும்...

2025-01-16 07:09:56
news-image

எனது வெற்றியே யுத்தநிறுத்தஉடன்படிக்கையை சாத்தியமாக்கியது –...

2025-01-16 00:32:44
news-image

ஆறுவார கால யுத்த நிறுத்தம் -...

2025-01-16 00:12:39