சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு 'யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் - 2023' நிகழ்ச்சித் திட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபவனி இடம்பெறவுள்ளது.
இவ்வருடம் 'பெருமிதத்தின் வண்ணங்களின் ஒருங்கிணைவு' என்ற கருப்பொருளிலான சுயமரியாதை மாதக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக யாழில் இடம்பெறும் நடைபவனி, யாழ். பேருந்து நிலையத்தின் முன்னால் ஆரம்பமாகவுள்ளது.
இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்தும், LGBTIQA+ சமூகத்தினரும் சக மனிதர்களாக கருதப்பட்டு, அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு மதிக்கப்படவும் வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையிலேயே இந்நடைபாதை இடம்பெறவுள்ளது.
LGBTIQA+ சமூகத்தினர் ஒடுக்குமுறைகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படாமல் வாழ்வதே இந்த சுயமரியாதை நடைபவனியின் நோக்கமாகும்.
சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படை இலக்காகக் கொண்டு ஒருங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, பொது நூலக வீதி, வைத்தியசாலை வீதி ஊடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM