கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெறும்.
திருவிழா தினமான 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
இதேவேளை, பெருவிழா திருப்பலிகள் அன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் அன்ரனி ஜயக்கொடி ஆண்டகை தலைமையில் ஆங்கில மொழியிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM