சூடானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, அமைதியை சீர்குலைத்தமைக்காக பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அப்தேல் பத்தாஹ் அல் புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவத்துக்கும் மொஹம்மத் ஹம்தான் டக்லோ தலைமையிலான, ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும் மோதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகுவதாக சூடான் இராணுவம் நேற்றுமுன்தினம் அறிவித்தது.
அதன்பின் சூடான் தலைநகர் கார்ட்டூமில் நடந்த தாக்குதல்களில் 19 பேர் பலியானதுடன் 105 பேர் காயமடைந்தனர் என மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வன்முறைகள் நீடிப்பதற்கு காரணமானவர்களுக்கு பொருளாதாரத் தடைகளையும், விசா கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா விதிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் கூறியுள்ளார்.
4 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளளது. இவற்றில் இரு நிறுவனங்கள் சூடான் இராணுவத்துடன் தொடர்புடையவை.
ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையின் தளபதி டக்லோ மற்றும் அவரின் இரு சகோதரர்களினால் நடத்தப்படும் இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
சூடானில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெறும் மோதல்களால் குறைந்தபட்சம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM