உலகத் தமிழ் அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பு - 7இல் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் நாளை சனிக்கிழமை ஜூன் 3ஆம் திகதி மாலை 3 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நிகழ்ந்த FETNA விழாவில் வெளியிடப்பட்ட இந்நூல், அடுத்து கனடா, இங்கிலாந்து, இந்தியா (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, தற்போது இலங்கையில் இதன் அறிமுக விழா வெண்பா நூல்மனையின் ஒருங்கிணைப்பில் நிகழ்கிறது.
சிரேஷ்ட அறிவிப்பாளர் விமல் சொக்கநாதனின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் மூத்த வானொலி அறிவிப்பாளரும் முன்னாள் பிரதிப் பரீட்சை ஆணையாளருமான G. போல் அந்தனி மற்றும் 'தகவம்' செயலாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான வசந்தி தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
அத்துடன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் (வீரகேசரி) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் இந்நூலினை வெளியிடவுள்ளார்.
தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனின் சிறப்புரை இடம்பெறும்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எம்.சி. ரஸ்மின் மற்றும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் ஆகியோர் நூல் நயவுரையினை வழங்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM