நிலையான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணிலின் நிர்வாகம் தொடர வேண்டும் - எஸ்.எம்.சந்திரசேன

Published By: Digital Desk 5

01 Jun, 2023 | 04:53 PM
image

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிர்வாகம் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.

அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி முரண்பட்டுக் கொண்டிருந்தால் பொருளாதார பாதிப்புக்கு ஒருபோதும் தீர்வுகாண முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாயத்துறை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானத்தால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து பாரிய அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதியாக தெரிவு செய்தோம்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்கள் தற்போது வெற்றிப் பெற்றுள்ளன.

நாட்டின் கடன் நிலைபேறான தன்மை குறித்து சர்வதேச நாடுகளின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை தற்காலிகமானதொரு முன்னேற்றமாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிர்வாகம் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.

ஜனாதிபதியின் தீர்மானங்கள் சிறந்தது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் நன்கு அறிவார்கள். அரசியல் நோக்கத்துக்காக போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என முரண்பட்டுக் கொண்டிருந்தால் பொருளாதார பாதிப்புக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

விளைவுகள் மாத்திரமே மிகுதியாகும். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது. அரசியல் செய்வதற்கு நாடு என்பதொன்று அவசியம் என்பதை அரசியல் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06