கடன் பெறுவதை தவிர வேறு எந்த திட்டமும் ஜனாதிபதியிடம் கிடையாது - சுதந்திர மக்கள் சபை

Published By: Vishnu

01 Jun, 2023 | 05:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடன் பெறுவதை தவிர வேறு எந்த திட்டமும் ஜனாதிபதியிடம் கிடையாது. அதிக கடன் சுமையால் தான் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.

கடன் மறுசீரமைப்பு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரை தற்காலிக தீர்வினை மாத்திரம் வழங்கும் என சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற பிரதிநிதி குணபால ரத்னசேகர தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அதிக கடன்சுமையினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. கடன் பெற்று பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். பொருளாதார பாதிப்புக்கு கடன் பிரதான காரணியாக காணப்படும் நிலையில் கடன் பெற்று எவ்வாறு பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வது.

கடன்களை மறுசீரமைப்பதை தவிர்த்து அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாது. கடன் பெறல்,மறுசீரமைத்தல் ஆகிய தீர்மானங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரை சாத்தியமாக அமையும்.கடன் மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர் வட்டியுடன் கடன்களை மீள செலுத்த வேண்டும்.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.வங்கி கட்டமைப்பில் பாதிப்பில் ஏற்படும் பாதிப்பின் உண்மை தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவு திட்டங்களை வெளிப்படை தன்மையுடன் விரிவுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள்.ஆனால் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறதா என்பது கேள்விக்குறியான நிலையில் காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிபபிட்டுக் கொண்டு நடுத்தர மக்களை நெருக்குள்ளாக்கும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுக்கிறது.

அரசாங்கத்தின் தீர்மானங்களினால் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மாத்திரமே பயனடைந்துள்ளார்கள்.நாட்டு மக்கள் இன்றும் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா இந்திய விவகாரம் -இலங்கை இந்தியாவிற்கு...

2023-09-26 08:34:02
news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49