வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

Published By: Rajeeban

01 Jun, 2023 | 03:31 PM
image

அரசாங்கமருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளிடம் வெளியில் தனியாரிடமிருந்து  சிலவகை மருந்துகளை கொள்வனவு செய்யுமாறும்  சிலவகை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதால் அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தேசிய வைத்தியசாலைக்கு வந்த பலரிடம் உரையாடியவேளை அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருந்துதட்டுப்பாட்டினால் வறியவர்கள் சுமக்கும்சுமை குறித்து தெரியவந்தது,மருத்துவமனைகள் அவர்கள் வெளியே மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு அழுத்தம்கொடுப்பதால் இந்த நிலை காணப்படுகின்றது.

இது அவர்கள் மேலதிக பணத்தை செலவிடவேண்டிய இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது.

முகமட் என்ற நோயாளி யாழ்ப்பாணத்திலிருந்து நீரிழிவு நோய்க்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்தார்.எனினும் தேசிய வைத்தியசாலையில் அந்த மருந்துகள் இல்லாததால் அவற்றை வெளியே கொள்வனவு செய்யுமாறு கேட்டிருந்தனர்.

தனது மகனின் காயங்கள் இரண்டிற்காக  அவரை வெளியே கொண்டு சென்று இரண்டு பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அதற்கு 1950 ரூபாய் செலவானதாகவும் சொய்ச ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இல்லாததால் வெளியில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு தன்னை கேட்டுக்கொண்டனர் என தெரிவித்தார் மஹரகம பகுதியை சேர்ந்த நில்மினி குமாரி இதுநேரம்பிடிக்கும் வேலை மேலும் பணமும் செலவாகின்றது இது அநீதி என அவர் தெரிவித்தார்.

மருத்துவர் தெரிவித்த மருந்தினை வெளியே வாங்குவதற்கு தேவையான பணத்தினை யாரிடமாவது வாங்கவேண்டும் என தெரிவித்தார் 70 வயது குமாரசிங்க என்னிடம்தற்போது பணம் இல்லை வீட்டுக்கு செல்லவேண்டும் ஏழைகள் என்பதால் துன்பத்தை அனுபவிக்கவேண்டியுள்ளது என குறிப்பிட்டார்

இதேவேளை அரசமருந்தாளர்கள்  சங்கத்தின் தலைவர் துசாரரணதேவ அரசாங்கமருத்துவமனைகளில் கடும் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கைமருத்துவ சங்கத்தின் தலைவர் வினன்யா ஆரியரட்ண அரசமருத்துவமனைகளில்மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என தெரிவித்தார்.

daily mirror

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04