சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைத்தால் தேசிய அரசாங்கம் அமைக்கலாம் - பிரசன்ன ரணதுங்க

Published By: Vishnu

01 Jun, 2023 | 09:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்தை அமைக்க சகல எதிர்க்கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் அது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்துவார்.அமைச்சு பதவிகளை இலக்காக கொண்டு அரசாங்கத்தில் இணையும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல அரசியல் கட்சிகளுக்கும் பலமுறை அழைப்பு விடுத்தார். ஆசை ஆனால் பயம் என்ற காரணத்தால் அரசாங்கத்துடன் இணையவில்லை.பாரிய போராட்டத்தில் இருந்து நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தேசிய அரசாங்கத்தை அமைக்க பலமுறை அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கத்தை அமைக்க சகல எதிர்க்கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் அது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்துவார்.

அமைச்சு பதவிகளை இலக்காக கொண்டு அரசாங்கத்தில் இணையும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படமாட்டாது என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.அமைச்சரவையை விரிவுப்படுத்தும் நோக்கம் தற்போது கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால்; ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கட்சி பக்கம் செல்லமாட்டார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:55:07
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24