உடற்பயிற்சி கூடமொன்றில் தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் இளைஞர் ஒருவர், திடிரென்று சரிந்து விழுந்து மரணமடைகிறார். திருமண விழா ஒன்றில் பங்குபற்றி நடனமாடிய இளம் வயதுள்ள ஆண் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார்.
இது போன்ற பல சம்பவங்கள், ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ வல்லுனர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாக கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் இதற்கு ஹைப்பர்டிராபிக் கார்டியோமயோபதி என குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பாதிப்பு பரம்பரை மரபணு மாற்றத்தினால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது உங்களது உறவினர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு, மரணமடைந்திருந்தால் அவர்களின் பரம்பரையில் இருப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
மேலும் சிலருக்கு மரபணு மாற்றம் காரணமாக இதய தசைகளில் இயல்பான அளவை விட அதன் சுவரின் தடிமன் அதிகரித்து விடும்.
இதன் காரணமாக இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் தடையோ அல்லது அடைப்போ ஏற்படுகிறது. இதன் காரணமாக இதயத்துடிப்பு சமச்சீரற்ற தன்மைக்கு உயர்ந்து, மாரடைப்பையோ அல்லது இதய செயலிழப்பையோ ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்குகிறது.
மேலும் இது எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் திடீரென்றும் தாக்கக்கூடும். இதன் காரணமாக இளம் வயதினர் தங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கும் முன், இதய ஆரோக்கியம் குறித்தும், இதய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு குறித்தும். முறையான பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பாரம்பரிய மரபணு மாற்றம் காரணமாக உங்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு இருந்தால், அதனை மருத்துவர்கள் துல்லியமாக அவதானித்து அதை தவிர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
ஹைப்பர்டிராபிக் கார்டியோமயோபதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எக்கோ கார்டியோகிராம் ,எலக்ட்ரோ கார்டியோகிராம், கார்டியாக் எம் ஆர் ஐ, ஸ்ட்ரெஸ் டெஸ்ட்.. ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து அவர்கள் மருந்து, மாத்திரை, இயன்முறை சிகிச்சை, மின்னாற்றல் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகளில் இதற்கு நிவாரணத்தை வழங்குகிறார்கள். வெகு சிலருக்கு மட்டும் சத்திர சிகிச்சை செய்து பிரத்யேக கருவியை பொருத்தி நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
எனவே இளைய தலைமுறையினர் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது உழைத்துக் கொண்டிருக்கும் போதோ நெஞ்சு வலி, மூச்சு திணறல், மார்பக வலி.. போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து, அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, எம் மாதிரியான பாதிப்பு என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் சிலருக்கு இத்தகைய பாதிப்பின் காரணமாக இதய தசைகளில் உள்ள செல்கள் சிதைந்து சீர்குலைந்து விடும். இது சீரற்ற இதயத் துடிப்பை உருவாக்கி, பாரிய அச்சுறுத்தலை உண்டாக்கும்.
டொக்டர் துர்கா தேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM