DFCC வங்கியானது, வங்கி முழுவதும் அதன் நிலைபேறாண்மை மூலோபாயத்தை செயல்படுத்தியதற்காக வங்கிச்சேவைப் பிரிவில் வெற்றியாளராகவும், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் மேன்மைக்கான விருதும் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. The Institute of Chartered Professional Managers of Sri Lanka ஏற்பாடு செய்த 2023 ஆம் ஆண்டின் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2023 நிகழ்வில் DFCC வங்கிக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
வங்கியின் முதன்முதல் முறைசார் நிலைபேறாண்மைக் கொள்கை, மூலோபாயம் மற்றும் திட்டம் ஆகியவை 10 வருட காலத்திற்கானதாக 2020 இல் உருவாக்கப்பட்டன. இத்துறைகளில் அதன் வரலாற்று சாதனைகளை அத்திவாரமாகக் கொண்டு இவை கட்டியெழுப்பப்பட்டன. இதன்படி, DFCC வங்கியானது, நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் எழுதிறன் கொண்ட இலங்கையை நோக்கி பங்களிப்பதற்கும், நிலைபேண்தகு பணியிடங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்கான சாதகமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேறாண்மைக்கு பங்களிப்புச் செய்யும் முன்னணி வங்கியாக மாறுவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கியால் நிதியளிக்கப்படும் திட்டங்கள் தேவையான அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக விதிமுறைகளையும் பின்பற்றி, அவற்றைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் அதே வேளையில், இத்துறை தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களைக் குறைப்பதற்காக சமூக மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பை (Social and Environmental Management System - SEMS) கடந்த சில ஆண்டுகளாக வங்கி செயல்படுத்தியுள்ளது.
சொனாலி ஜயசிங்க சிரேஷ்ட துணைத் தலைவர் - மனிதவளத் துறைத் தலைவர் மற்றும் நில்மினி குணரத்ன – துணைத் தலைவர்/ சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மைக்கான தலைவர் ஆகியோர் விருதுகளை ஏற்றுக்கொள்கின்ற காட்சி.
விருது வழங்கும் நிகழ்வில் DFCC அணி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM