நடாஷா எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையின் பழைய மாணவியோ அல்லது எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையில் வைத்து கருத்து வெளியிடவோவில்லை -  அருட் தந்தை கெமுனு டயஸ்

Published By: Vishnu

31 May, 2023 | 08:35 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பெளத்த மதத்தை அகெளரவப்படுத்தும் வகையிலான கருத்தை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய என்பவர் எந்தவொரு கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் பழைய மாணவி அல்ல எனவும் அவ்வாறான கருத்தை, அவர் எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையில் வைத்து வெளியிடவில்லை.

இவ்வாறு உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடுவதை தவிர்க்குமாறு கத்தோலிக்க தனியார் பாடசாலையின் பொது முகாமையாளர் அருட் தந்தை கெமுனு டயஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்டு கைது செய்யப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரிய என்பவர் கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் பழைய மாணவி என்றும், குறித்த கருத்தை கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வுன்றிலேயே  வெளியிட்டிருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள்  உண்மைக்கு புறம்பானது. 

எங்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி, நடாஷா எதிரிசூரிய என்பவர், கொழும்பு - 03 இல் உள்ள பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பெளத்த மதத்தையும் புத்த பெருமானையும் அகெளரவப்படுத்தும் வகையில், நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறான கருத்துகள், நாட்டின் இன மற்றும் மத ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும். இவ்வாறு, இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு எவரேனும் ஒருவர் ஈடுபடுவாராகில் அது கண்டிக்கத்தக்க விடயமாகும் " என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47