பிரதமர் தினேஷ் குணவர்தன - தாய்லாந்து பிரதமருக்கிடையில் சந்திப்பு

Published By: Digital Desk 5

31 May, 2023 | 08:33 PM
image

(எம்.மனோசித்ரா)

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நாட்டு பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

பாங்கொக்கிலுள்ள அரச அலுவலகத்தில் புதன்கிழமை (31) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் செவாக் உற்சவத்தில் பங்குபற்றுவதன் ஊடாக இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் , வர்த்தக மற்றும் முதலீடுகளைப் போன்றே மத இணக்கப்பாடுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதமரின் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

இலங்கையும் தாய்லாந்தும் தமக்கிடையில் பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் காரணமாக வலுவான கலாச்சார மற்றும் மத உறவுகளைக் கொண்டுள்ளன.

தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்குப் பிறகு தாய்லாந்தின் நான்காவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இலங்கை உள்ளது.

தாய்லாந்திற்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளில் இரத்தினங்கள், நகைகள், தேயிலை, மசாலா பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

இதேவேளை, தாய்லாந்து இலங்கைக்கு சீனி, ஆடைகள், உலர் மீன், சீமெந்து, இரசாயன பொருட்கள், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.

இவற்றைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் அதிகரிக்க முடியும் என்று தாய்லாந்து பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இரத்தினக் கற்களை மெருகூட்டுவதற்கும் விற்பனை செய்வதற்கும் தாய்லாந்து மிகச் சிறந்த சந்தையாகும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் நேரடிப் போட்டியைக் குறைக்க இரு நாடுகளுக்கும் இந்த தொழில் மிகவும் உதவும் என்றும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தாய்லாந்து பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சியில் (பிம்ஸ்டெக்), அதன் உறுப்பினர்களிடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பவையாகக் காணப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரளிக்க அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து தாய்லாந்து பிரதமரிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

ஆசியான் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் டொன் பிரமுத்வினாய், பிரதமருடனான தனது சந்திப்புகளை நினைவுகூர்ந்ததோடு, சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு தமது முழு ஆதரவையும் உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47