இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு இத்தாலி தூதுவர் இணக்கம்

Published By: Digital Desk 5

31 May, 2023 | 08:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இத்தாலியில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இந்த நாட்டு வாகன அனுமதி பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க இத்தாலி தூதுவர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா மனெல்லா மற்றும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் ஆகியோருக்கிடையில் புதன்கிழமை (31) நீதி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதற்கான அனுமதியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் வாழ்ந்துரும் மற்றும் அங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவரும் இலட்சக்கணக்கான இலங்கை மக்களுக்கு இதுவரை நடைமுறை பிரச்சினையாக இருந்துவந்த சர்வதேச வாகன அனுமதி மத்திரம் பெற்றுக்கொள்வதன் கஷ்டத்தை கருத்திற்கொண்டு, இலங்கையர்களால் நீதி அமைச்சரிடம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய,  அவர்களுக்கு நிவாரணம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் வகையில், இலங்கை மக்களுக்கு இந்த நாட்டு அனுமதிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரத்தை இத்தாலியில் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்காக, இத்தாலி தூதுவரிடம்  விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதன்போது குறித்த கோரிக்கைக்கு இத்தாலி தூதுவர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இத்தாலி தூதுவர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கை மற்றும் இத்தாலி நாடுகளுக்கிடையில் இருந்துவந்த நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை கருத்திற்கொண்டு, இலங்கையில் வசிக்கிறன்ற இத்தாலி நாட்டவர்களுக்கும் இந்த நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இத்தாலியில் அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை பெற்றுத்தருமாறும் தூதுவர் இதன்போது அமைச்சரிடம் கோரியதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08