படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ.நடேசன் 2021 ஆம் ஆண்டு அச்சுறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு சரியாக 3 வருடங்களின் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தொழில் சார் ஊடக சங்கம் மட்டு ஊடக அமையம் இணைந்து படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 19 ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் இன்று புதன்கிழமை (31) ஊடகவியலாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் மற்றும் அருட்தந்தை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிந்து சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தினர்.
இதன்போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகள் பிரிந்ததற்கு பின்னர் முதலாவதாக வேட்டுவைக்கப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் என பார்கின்றோம். 22 வருடங்களாக வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த அவரை இழந்திருக்கின்றோம்.
2000 ஆயிரம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாக 2001 ம் ஆண்டு வெற்றியளித்தது.
இருந்தபோதும் 2009 விடுதலைப் புலிகள் போராட்டம் மௌனித்ததற்கு பிற்பாடு இன்று நாங்கள் பார்க்கின்றபோது ஒரு தலைவரை ஒற்றைக் கதிரையில் பார்த்த நாங்கள் இப்போது 10 தலைவர்களை 10 கதிரையில் இன்று பார்க்கின்றதுடன் யார் தலைவர் என யாருக்கும் தெரியாத நிலையில் தமிழ் தேசிய அரசியல் 19 வருடம் சென்று கொண்டிருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்துக்காக பல்வேறு தரப்பினர் போராடினாலும் கூட ஊடகவியலாளர்கள் பேனா முனையில் போராடியதன் நிமிர்த்தமாக பேரினவாதம் திட்டமிட்டு 46 ஊடகவியலாளர்களை படுகொலை செய்துள்ளது.
பிரேமதாஸா தொடக்கம் இப்போது உள்ள ஜனாதிபதி வரையில் ஜனாதிபதிகள் மாறியிருக்கலாம் ஆட்சி மாறியிருக்கலாம். ஆனால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்காத சூழ்நிலையில் இந்த 19 நினைவேந்தல் செய்துகொண்டிருக்கின்றோம். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நீதி வழங்க மாட்டார்கள் எனவே சர்வதேச மட்டத்தில் நீதி கிடைக்க வேண்டும் என கூறிவருகின்றோம்.
வடகிழக்கில் பல ஊடகவியலாளர்கள் துணிந்து பல விடையங்களை வெளிக் கொண்டுவந்தாலும் கூட அவர்களுக்கும் அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கின்றதுடன் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு செல்லலாம் என்ற அச்சுறுத்தலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆகவே, சமாதானம் என்று சொல்லுகின்றவர்கள் நாட்டில் யுத்தமில்லை என்று சொல்லுபவர்கள் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் மௌனித்தாலும் கூட தமிழ் மக்களுக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வு வரும் வரை நாங்கள் அச்சுறுத்தப்பட்ட ஒரு இனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழல் வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகம் இதனை கணக்கில் எடுத்து வடகிழக்கு இணைந்து சயநிர்ணய உரிமையிலான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM