(எம்.வை.எம்.சியாம்)
உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மெதுவாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உலக சந்தையின் கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு வீதத்தை அறிவிக்க முடியும்.
கடந்த சில மாதங்களில் ரூபாயின் பெறுமதி சுமார் 20 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் கூறுகின்றன.
குறிப்பாக ரூபாவின் பெறுமதியை ஒப்பிடும் போது விநியோகத் துறைக்கான பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து வருவதால் அவற்றின் விலையை குறைப்பது நியாயமானதா? என ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
ஏனெனில் விலை உயர்வுடன் ஒப்பிடும் போது டொலரின் அதிகரிப்பு பொருட்களின் விலை உயர்வு போல் வேகமாக இடம்பெறாது என்பதை நாம் பொதுவாக அறிவோம். எனவே பொருளாதாரத்தை மீட்டெடுக்க சட்ட வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM