வட கொரியா இன்று விண்வெளிக்கு அனுப்ப முயன்ற உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்துள்ளது.
வட கொரியாவின் விண்வெளி முகவரகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், இராணுவக் கண்காணிப்பு செய்மதியான மலிகயோங் 1 (Malligyong) எனும் செய்மதியை, சோலிமா-1 ('Chollima-1') ரொக்கெட் மூல் இன்று அதிகாலை ஏவியதாக தெரிவித்துள்ளது.
எனினும், இரண்டாவது கட்டத்தின் என்ஜினின் அசாதாரண ஆரம்பம் காரணமாக இந்த ரொக்கெட் கடலில் வீழ்ந்ததாக அம்முகவரகம் தெரிவித்தள்ளது.
மேற்படி ரொக்கெட் பாகங்கள் சிலவற்றை தென் கொரியா கைப்பற்றியுள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிகள், ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்துக்கு முரணானதாகும்.
இந்நிலையில், ஐநா செயலாளர் நாயககம் அன்டோனியோ குட்டேரெஸ், வடகொரியாவின் செய்மதி ஏவுமு; முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியனவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வட கொரியாவுக்குச் சொந்தமான, இயங்கும் நிலையிலுள்ள செய்மதி எதுவும் தற்போது விண்வெளியில் இல்லை. (Photo: AFP)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM